search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை பொருளாதார ஆலோசகர்"

    சர்வதேச நிதியத்தின் 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் கீதா கோபிநாத்(48 வயது) நியமிக்கப்பட்டார். #GitaGopintah #ChiefEconomist
    வாஷிங்டன்:

    189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்.) அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை இதன் முக்கிய பணிகளாகும்.

    இந்த அமைப்பின் 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் கீதா கோபிநாத்(48 வயது) நியமிக்கப்பட்டார். சர்வதேச நிதியத்தில் தலைமை பொருளாதார ஆலோசகர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி ஆகும்.

    கடந்த 1-ந்தேதி சர்வதேச நிதியத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கீதா கோபிநாத், இந்த அமைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். இதற்கு முன்பு தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்து வந்த மவுரிஸ் ஓப்ட்ஸ்பெல்ட் கடந்த 31-ந்தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

    தற்போது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரில் வசிக்கும் கீதா கோபிநாத் கர்நாடக மாநிலம் மைசூருவில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் டி.வி.கோபிநாத்-விஜயலட்சுமி. இவர்கள் இருவரும் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர்கள். கீதா கோபிநாத் தற்போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  #GitaGopintah #ChiefEconomist 
    மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா செய்தது குறித்து ராகுல்காந்தி கேப்டன் (மோடி) வேகமாக தூங்குகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். #ArvindSubramanianResigns
    புதுடெல்லி:

    தமிழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் (வயது59). கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிந்த நிலையில் அதே பதவியில் சிறிது காலம் தொடருமாறு அரசு கேட்டுக் கொண்டது.

    இந்த நிலையில் பதவி காலம் முடிய 4 மாதம் உள்ள நிலையில் அரவிந்த் சுப்பிரமணியன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.


    இந்த தகவலை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டி இருப்பதால் தவிர்க்க முடியாத காரணத்தால் பதவி விலக விரும்புவதாக அரவிந்த் சுப்பிரமணியன் தன்னிடம் தெரிவித்ததாக ஜெட்லி தெரிவித்தார்.

    அரவிந்த் சுப்பிரமணியனின் குடும்ப சூழல் கருதி அவரது ராஜினாமாவை ஏற்றதாக ஜெட்லி தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மோடி அரசை கடுமையாக தாக்கி விமர்சனம் செய்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-


    நிதி மந்திரி (முன்னாள்?) பூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு பேஸ்புக் மூலம் முக்கிய செய்திகளை வெளியிடுகிறார். இந்தியா பொருளாதாரத்தின் சாவி பா.ஜனதா பொருளாளரிடம் இருக்கிறது.

    பா.ஜனதா அரசு மூழ்கும் கப்பல் என்பதால் அதில் இருந்து திறமையானவர்கள் விலகி செல்கிறார்கள். கண்ணுக்கு புலப்படாத கையால் ஆர்.எஸ்.எஸ். தன் வசப்படுத்த பார்க்கிறது.

    அதே நேரத்தில் கேப்டன் டிமோ (மோடி) வேகமாக தூங்குகிறார். இது பைத்திய காரதனமாக உள்ளது.

    இவ்வாறு ராகுல்காந்தி மோடி அரசை தாக்கியுள்ளார். #ArvindSubramanianResigns #RahulGandhi
    தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் திடீரென அந்தப் பதவியில் இருந்து விலகி உள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArvindSubramanian #Resign
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் (வயது 59). இவர் 2014-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார். இந்தப் பதவி 3 ஆண்டு காலத்துக்கானது. ஆனால் 3 ஆண்டு முடிந்த பின்னரும், அந்தப் பதவியில் தொடர்ந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் திடீரென அந்தப் பதவியில் இருந்து விலகி உள்ளார். இதை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்து உள்ளார்.

    அரவிந்த் சுப்பிரமணியன் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “3 ஆண்டுகள் முடிந்த உடன், அவர் இன்னும் கொஞ்ச காலம் தொடருமாறு கேட்டுக்கொண்டேன். அந்த நேரத்தில்கூட அவர் குடும்ப பொறுப்புக்கும், தற்போதைய பணிக்கும் இடையே அல்லாடுவதாக தெரிவித்தார். இருப்பினும் பணியை அவர் மேலானதாக கருதினார். தனது பொறுப்புகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றினார். அவர் வேறு வழியின்றி இப்போது என்னை விட்டு விலகி உள்ளார்” என கூறி உள்ளார்.

    மத்திய மந்திரி அருண் ஜெட்லி, தன்னைப்பற்றி கூறி உள்ள கனிவான வார்த்தைகளுக்காக அரவிந்த் சுப்பிரமணியன் நன்றி தெரிவித்துக்கொண்டு உள்ளார். அரவிந்த் சுப்பிரமணியன் மீண்டும் ஆராய்ச்சிப்பணிக்காகவும், எழுத்துப்பணிக்காகவும் அமெரிக்கா செல்வதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  #ArvindSubramanian #Resign #tamilnews
    மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் தனிப்பட்ட காரணங்களுக்காக பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். #ArvindSubramanian
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் அரவிந்த் சுப்ரமணியன் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மூன்றாண்டு பதவிக்காலத்தை அவர் நிறைவு செய்தாலும், மேலும் ஓராண்டு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 

    இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அவருக்கு மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு வழங்க அரசு தயாராக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில், “நன்றி அரவிந்த் சுப்ரமணியன். சில நாட்களுக்கு முன்னதாக அரவிந்த் சுப்ரமணியனிடம் வீடியோ கான்பரென்ஸ் முறையில் பேசினேன். அமெரிக்காவில் உள்ள தனது குடும்பத்தினருடன் வசிக்க விரும்புவதால் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்” என பதிவிட்டுள்ளார்.

    சென்னையில் பிறந்தவரான அரவிந்த் சுப்ரமணியன் டெல்லியில் பட்டப்படிப்பும், அகமதாபாத் ஐ.ஐ.எம்.மில் மேலாண்மை படிப்பும்,  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்சி பட்டமும் பெற்றவர் ஆவார். இவருக்கு முன்னதாக, தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன், பதவிக்காலம் முடிந்ததும் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×